விபத்து: செய்தி
ரம்ஜான் முதல் நாளில் சோகம்; பாகிஸ்தானில் வெடித்துச் சிதறிய கட்டிடம்; 9 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் பனிச்சரிவால் தடம்புரண்டது; 80 பயணிகளின் நிலை என்ன?
சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது.
விபத்தில் சிக்கினால் ரூ.1.5 லட்சம் இலவச சிகிச்சை பெறுவது எப்படி? பிஎம் ராகத் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் நடைமுறை
மத்திய அரசின் பிஎம் ராகத் (PM RAHAT) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எந்தவொரு சாலையில் விபத்துக்குள்ளாகும் நபரும் தகுதியுடையவர் ஆவார்.
விபத்து இழப்பீடு இனி முழுமையாக உங்களுக்கே! வருமான வரியிலிருந்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு விலக்கு; பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 இல், மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
வானில் மாயமான விமானம்.. நொறுங்கி விழுந்து 15 பேர் பலி; கொலம்பியா விமான விபத்தில் இளம் எம்பியும் உயிரிழப்பு
வடகிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில், புதன்கிழமை (ஜனவரி 28) அன்று அரசுக்குச் சொந்தமான சதேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்: பார்மதியில் நடந்த விபத்தில் 6 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் எட்டாவது துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66), இன்று (ஜனவரி 28, 2026) காலை நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார்.
பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
விமான விபத்தால் நிலைகுலைந்த ஏர் இந்தியா! ரூ.15,000 கோடி நஷ்டம்! மீண்டு வருமா?
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
80 அதிகாரிகள் இருந்தும் காப்பாற்றப்படவில்லை; நொய்டா இளைஞரின் மரணத்தில் தந்தை கண்ணீர்
நொய்டாவைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 150 பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் உயிரிழந்தார்.
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரசிகர்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்; கார் பந்தய விபத்துக்குப் பிறகு தல அஜித் கொடுத்த உருக்கமான வாக்குறுதி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டே, கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஒடிசாவில் பரபரப்பு: ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வர் நோக்கிப் புறப்பட்ட இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் விபத்துக்குள்ளானது.
ஆபரேஷன் சிந்தூர் முதல் ஏர் இந்தியா வரை: 2025 ஆம் ஆண்டின் விபத்துகள்
2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது, பல முக்கிய சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தன.
பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
அசாம் ரயில் விபத்து: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி, 5 பெட்டிகள் தடம் புரண்டன
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சாய்ராங் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன.
ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் தாமதம்: அமெரிக்க வழக்கறிஞர் புகார்
ஏர் இந்தியா AI171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், தாமதமான இழப்பீடு மற்றும் உளவியல் அதிர்ச்சி குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.
கோவா கிளப்பில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலியான சோகம்
வடக்கு கோவாவின் பிரபலமான பாகா கடற்கரை அருகே உள்ள ஆர்போரா கிராமத்தில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் (Birch by Romeo Lane) என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, 28-க்கும் மேற்பட்டோர் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.
சிட்னியில் கார் மோதி 8-மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி ஐடி பொறியாளர் உயிரிழப்பு
சிட்னியின் ஹார்ன்ஸ்பை புறநகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி
சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.
சென்னை ராயப்பேட்டையில் மூடப்பட்ட பாலத்தில் பைக் ரேஸ் செய்து இருவர் உயிரிழப்பு
சென்னை ராயப்பேட்டையில் புதன்கிழமை மூடப்பட்ட போக்குவரத்து பாலத்தில் வேகமாக வந்த இரண்டு மோட்டார் பைக்குகள் மோதியதில் இரண்டு ஆண்கள் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.
சத்தீஸ்கரில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
241 பேரை கொன்ற துயரமான ஏர் இந்தியா விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பிபிசியிடம் தான் தப்பித்ததை ஒரு "அதிசயம்" என்று விவரித்துள்ளார்.
தெலுங்கானா கோர விபத்து: தவறான பக்கத்தில் வந்த லாரி பேருந்து மீது மோதியதில் 16 பேர் பலி
திங்கள்கிழமை காலை செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் கேட் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், தவறான பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TGRTC) பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர கோவில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி: தகவல் தெரிவிக்காததே காரணம்; முதல்வர் பேட்டி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி
டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.
கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
ஆவடியில் வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் நான்கு பேர் பலி; விபத்தின் பின்னணி
தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அருகே ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலைய கட்டுமானத் தளத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது.
மூணாறில் படப்பிடிப்பின் போது விபத்து: நடிகர் ஜோஜு ஜார்ஜ் காயமடைந்தார்
மூணாறு அருகே லக்கம் பகுதியில் நடைபெற்று வந்த 'வரவு' மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
ஏர் இந்தியா விபத்து விசாரணை அறிக்கை கசிந்த விவகாரம்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
260 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு
ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.
குஜராத்தின் பிரபல சக்தி பீட சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் பலி
குஜராத்தில் உள்ள பிரபலமான சக்திபீடமான பாவ்கட் கோயிலில், சனிக்கிழமை (செப்டம்பர் 6) சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
திருப்பூரில் டாடா ஹாரியர் எலக்ட்ரிக் பின்னோக்கி உருண்டு விபத்து; ஒருவர் பலி; சம்மன் மோட்தான் விபத்திற்கு காரணமா?
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த துயரமான சம்பவத்தில், டாடா ஹாரியர் எலக்ட்ரிக் கார் ஒன்று பின்னோக்கி உருண்டு வந்து, ஒருவரை நசுக்கியதில் அவர் உயிரிழந்தார்.
'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்
ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து பதினொரு பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு பேர் உயிரிழந்தனர்.
அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய செயற்கை இரத்த மாற்றீட்டை உருவாக்கி வருகின்றனர்.
அகமதாபாத் விபத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 112 ஏர் இந்தியா விமானிகள் உடல்நிலை சரியில்லை என விடுப்பு
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானது, தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து விமானக் குழுக்களிலும் 112 ஏர் இந்தியா விமானிகள் நோய்வாய்ப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை (ஜூலை 24) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியது.